இந்தியா

வெள்ளம் பாதித்த பகுதிகளை JCBயில் சென்று ஆய்வு செய்த சந்திரபாபு நாயுடு - வீடியோ

Published On 2024-09-02 11:45 GMT   |   Update On 2024-09-02 15:16 GMT
  • குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.
  • கனமழையால் ஆந்திராவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.

இதனால் ஆந்திராவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதிகாரிகளின் அறிவுறுத்தலை மீறி வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகுகளில் சென்று சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.

இந்நிலையில், இன்று ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடா பகுதிகளை JCB-யில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.

இந்த மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து செல்லக்கூடிய 18 ரெயில்களை தெற்கு ரெயில்வே இன்று ரத்து செய்துள்ளது.

Tags:    

Similar News