இந்தியா

ஒருவரை ஒருவர் தோற்கடித்து மகிழுங்கள்- ஆம் ஆத்மி, காங்கிரசை கேலி செய்த உமர் அப்துல்லா

Published On 2025-02-09 08:18 IST   |   Update On 2025-02-09 08:18:00 IST
  • 27 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது.
  • காஷ்மீர் முதல்-மந்திரியும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான உமர் அப்துல்லா ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியை கேலி செய்துள்ளார்.

புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிப் பெற்றுள்ளது. இதன் முலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது.

இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் தனித்தனியே களம் கண்ட நிலையில் இரு கட்சிகளும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளன. இதுதொடர்பாக காஷ்மீர் முதல்-மந்திரியும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான உமர் அப்துல்லா ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியை கேலி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "உங்களுக்குள் இன்னும் கொஞ்சம் சண்டையிட்டுக் கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பிரபலமான வீடியோ 'மீம்ஸ்' ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "உங்கள் விருப்பப்படி சண்டையிட்டுக் கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் தோற்கடித்து மகிழுங்கள்" என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News