டெல்லி தேர்தலில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை- மல்லிகார்ஜுன கார்கே
- டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக படுதோல்வியை சந்தித்து உள்ளது.
- கடினமான சூழலிலும் காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக பணியாற்றினோம்.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக படுதோல்வியை சந்தித்து உள்ளது. மாநிலத்தில் ஓரிடத்தில் கூட அந்த கட்சி வெற்றி பெறவில்லை. இந்த முடிவுகள் குறித்து கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில், 'டெல்லி சட்டசபை தேர்தலில், பொது நலன் சார்ந்து அரசுக்கு எதிரான சூழலை உருவாக்கினோம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் எங்களுக்கு வாய்ப்பை வழங்கவில்லை. அவர்களது கருத்தை ஏற்கிறோம்' என வருத்தத்துடன் கூறியிருந்தார்.
கடினமான சூழலிலும் காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக பணியாற்றியதாக கூறியுள்ள கார்கே, ஆனால் அதிக கடின உழைப்பும், போராட்டமும் மேலும் தேவைப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார். மாசுபாடு, யமுனை நதி தூய்மை, மின்சாரம், சாலைகள், குடிநீர் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகளை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எழுப்பும் என்றும் கார்கே உறுதிபட தெரிவித்து உள்ளார்.