இந்தியா

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க தி.மு.க. எம்.பி. நோட்டீஸ்

Published On 2025-03-10 09:26 IST   |   Update On 2025-03-10 11:00:00 IST
  • பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது.
  • நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பிப்ரவரி 13-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. மேலும், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இந்த நிலையில், இரு அவைகளும் இன்று (மார்ச் 10-ம் தேதி) வரை ஒத்திவைக்கப்பட்டன.

அந்த வகையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இந்த அமர்வில் பல்வேறு மசோதாக்கள் மற்றும் நிலைக்குழு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

இந்த நிலையில், இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடரின் போது தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார். 

Tags:    

Similar News