இந்தியா (National)

அரியானாவின் மூத்த காங்கிரஸ் தலைவர் விலகல்

Published On 2024-10-17 13:14 GMT   |   Update On 2024-10-17 13:14 GMT
  • 1952-ல் இவரது தந்தை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அப்போது இருந்து காங்கிரஸ் பாரம்பரியத்தை தொடர்ந்து வந்தவர் அஜய் சிங் யாதவ்.

அரியானா சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து இன்று பா.ஜ.க.வின் நயாப் சிங் சைனி முதல்வராக பதவி ஏற்ற நிலையில், அம்மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மந்திரியுமான கேப்டன் அஜய் சிங் யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சோனியா காந்தி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், உயர் தலைவர்கள் தன்னை இழிவாக நடத்தியது ஏமாற்றம் அளிக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

இவர் அகில இந்தியா காங்கிரஸ் கட்சியின் ஓபிசி சேர்மனாகவும் இருந்து வந்தார். அந்த பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

சோனியா காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், தன்னை இழிவுப்படுத்தும் வகையில் கட்சி நடத்தியதால் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

அஜய் சிங் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்க எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளது.

ராஜினாமா செய்ய வேண்டும் என எடுத்தது மிகவும் கடினமான முடிவு. எங்களுடைய குடும்பம் 70 வருடங்களாக காங்கிரஸ் கட்சியுடன் பயணித்துள்ளது. என்னுடைய மறைந்த தந்தை ராவ் அபேய் சிங் 2952-ல் எம்.எல்.ஏ. ஆனார். அதன்பிறகு நான் குடும்ப பாரம்பரியத்தை தொடர்ந்தேன். ஆனால் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் தன்னை இழிவாக நடத்திய விதம் ஏமாற்றம் அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை டேக் செய்துள்ளார்.

Tags:    

Similar News