இந்தியா

டெல்லியுடன் பேச இந்தி பயனுள்ளதாக இருக்கும்: சந்திரபாபு நாயுடு

Published On 2025-03-17 18:28 IST   |   Update On 2025-03-17 18:28:00 IST
  • முதலில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • டெல்லியை தொடர்பு கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

மத்திய அரசு மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சி செய்கிறது என தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. சில மாநிலங்களும் பிற மொழிகள் திணிக்கப்படுவதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில் இந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

முதலில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் அதேவேளையில் இந்திய கற்றுக் கொள்வது தேவையானதாகும். டெல்லியை தொடர்பு கொள்ள பயனுள்ளதாக இருக்கும். வாழ்வாதாரத்திற்காக மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளலாம். இந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழியாகும்.

வாழ்வாதாரத்திற்காக எத்தனை மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம். தாய்மொழியை நாம் மறந்து விடக்கூடாது. மொழிகள் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும்தான். அதிக மொழிகளை கற்றுக்கொள்ளவது சிறந்தது. இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இந்தி தேசிய மொழி கிடையாது. இந்தி, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News