இந்தியா (National)

பீகாரில் கங்கையில் மூழ்கும் வீடுகள்- வீடியோ

Published On 2024-09-25 04:02 GMT   |   Update On 2024-09-25 05:40 GMT
  • பாகல்பூரில் கங்கை கரையோரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
  • கங்கையை ஒட்டிய சுமார் 12 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூரில் தொடர் மழை காரணமாக கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாகல்பூரில் கங்கை கரையோரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

கங்கையை ஒட்டிய சுமார் 12 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாட்னா, பாகல்பூர், பக்சர், போஜ்பூர், சரண், வைஷாலி, சமஸ்திபூர், பெகுசராய், லக்கிசராய், கதிஹார், ககாரியா மற்றும் முங்கர் ஆகிய 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளில் உள்ள 13.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 376 கிராம பஞ்சாயத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன, பல குடியிருப்பாளர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆற்றின் கரையோரத்தில் உள்ள வீடுகள் கங்கையில் மூழ்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News