
வங்கி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
- மோசடியில் ஈடுபட்ட வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தா கைது செய்யப்பட்டார்.
- போலீசார் தொழில் அதிபர் அருணாச்சலம் உலகநாதன் உள்பட 7 பேரை கைது செய்து உள்ளனர்.
மும்பை:
மும்பையை சேர்ந்த நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் ரூ.122 கோடி மோசடி நடந்தது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் மோசடியில் ஈடுபட்ட வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தா கைது செய்யப்பட்டார்.
அவர் வங்கி பெட்டகத்தில் இருந்த பணத்தை எடுத்து கட்டுமான அதிபர், தொழில் அதிபர் உள்ளிட்டவர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது. வழக்கு தொடர்பாக போலீசார் தொழில் அதிபர் அருணாச்சலம் உலகநாதன் உள்பட 7 பேரை கைது செய்து உள்ளனர்.
இதில் அருணாச்சலம் உலகநாதன், ஹிதேஷ் மேத்தாவிடம் இருந்து வாங்கிய பணத்தில் ரூ.15 கோடியை ஜார்கண்டை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் பாண்டே என்ற பவன் குப்தாவிடம்(வயது45) கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 28-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.