இந்தியா

அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும்: பிரதமர் மோடி

Published On 2024-05-30 02:09 GMT   |   Update On 2024-05-30 02:09 GMT
  • ஒடிசாவின் கேந்திரபாராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
  • அப்போது பேசிய அவர், அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போகும் என்றார்.

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அடுத்த 6 மாதங்களில் ஒரு புதிய உத்வேகத்துடன் நாடு வளர்ச்சி அடையும்.

அதே சமயம், அந்த 6 மாதங்களில் அரசியலில் மிகப்பெரிய சூறாவளியும் வரப்போகிறது.

குடும்ப கட்சிகளின் உறுப்பினர்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.

அவர்களது தொடர் தோல்வி குறித்து சொந்த கட்சியினரே கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.

எனவே அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News