உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது: பிரதமர் மோடி
- செமி கண்டக்டர்கள் முதல் விமானம்தாங்கி கப்பல்கள் வரை இந்தியா உற்பத்தி செய்கிறது.
- பல சர்வதேச மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது என தெரிவித்தார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நடந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியா வர விரும்புகிறார்கள். உலகிற்கு புதிய பொருளாதார பாதையை இந்தியா வழங்கி உள்ளது.
செமி கண்டக்டர்கள் முதல் விமானம்தாங்கி கப்பல்கள் வரை இந்தியா உற்பத்தி செய்கிறது. பல சர்வதேச மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது.
உலகை முன்னோக்கி அழைத்துச் செல்லும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் இந்தியா இணை தலைமையாளராக இருந்தது. தற்போது உலக நாடுகளின் தொழிற்சாலையாக உள்ளது.
இந்தியாவின் வெற்றியை விரிவாக அறிய உலகம் விரும்புகிறது. உலக அளவில் நம் நாட்டின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
பல காலாவதியான சட்டங்களை பா.ஜ.க. அரசு ரத்து செய்துள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 3-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது.
இந்தியாவின் புதிய சாதனைகளை உலகளாவிய செய்தி சேனல்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும் என தெரிவித்தார்.