இந்தியா

அமெரிக்காவில் இருந்து ராகுல்காந்தி நாடு திரும்பினார்

Published On 2024-09-16 06:59 GMT   |   Update On 2024-09-16 06:59 GMT
  • 10 நாட்களுக்கு பிறகு ராகுல்காந்தி இன்று காலை டெல்லி திரும்பினார்.
  • இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலை வரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி கடந்த 6-ந்தேதி அதிகாலை டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார். 8-ந்தேதி அவர் அமெரிக்கா சென்றடைந்தார்.

அவர் 3 நாட்கள் அதாவது 10-ந்தேதி வரை பல்கலைக் கழக மாணவர்களுடன் உரையாடல் நிகழ்த்தினார். பிரதமர் நரேந்திரமோடியையும், மத்திய அரசையும் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு பா.ஜனதா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

3 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொரண்டு 10 நாட்களுக்கு பிறகு ராகுல்காந்தி இன்று காலை டெல்லி திரும்பினார்.

நாடு திரும்பிய ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா சட்டசபை தேர்தல்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

Tags:    

Similar News