கோப்புப் படம்
VIDEO: சாகசத்தை தொடங்கிய போர் விமானங்கள்.. பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி தொடக்கம்
- பெங்களூரு ஹெலகங்கா விமானப்படைத் தளத்தில் நடைபெறுகிறது.
- தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெறும்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 15 ஆவது சர்வதேச விமான கண்காட்சி இன்று முதல் தொடங்கியுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
பெங்களூருவில் 2 ஆண்டுக்கு ஒருமுறை என இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூரு ஹெலகங்கா விமானப்படைத் தளத்தில் நடைபெறுகிறது.
இன்று பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கிய விமான கண்காட்சி பிப்ரவரி 14-ம் தேதி வரை என 5 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெறும்.
விமான கண்காட்சி நடைபெறும் 5 நாட்களும் காலை ஒருமுறையும், மதியம் ஒருமுறையும் என 2 முறை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
விமான கண்காட்சியைக் காண பலரும் ஆர்வமுடன் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளின் எப் 35, எஸ்யூ 35 போர் விமானங்களும் எஸ்யூ 57,எப் 16 விமானங்களும் வான்வெளி சாகசங்களில் ஈடுபட உள்ளன.