இந்தியா

அந்தேரி, பாண்டுப், தாராவி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து

Published On 2025-02-02 04:23 IST   |   Update On 2025-02-02 04:23:00 IST
  • குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி அறிவித்து உள்ளது.
  • பொதுமக்கள் தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி கேட்டு கொண்டு உள்ளது.

மும்பை:

மும்பை பவாய் ஆங்கர் பிளாக் முதல் அந்தேரி மரோஜி தண்ணீர் சுரங்கம் வரை மாநகராட்சி குடிநீர் குழாய் பதிக்கும் பணி வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த பணிகள் நடைபெறும் நேரத்தில் மும்பை பாண்டுப், குர்லா, தாராவி, அந்தேரி, பாந்திரா ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி அறிவித்து உள்ளது.

அதன்படி வருகிற 5-ந் தேதி பாண்டுப்பில் உள்ள ஸ்ரீராம்பாடா, கின்டிபாடா, துல்சிபாடா, மிலிந்த் நகர், நரதாஸ் நகர், சிவாஜிநகர், மரோதாஹில், பாண்டுப் மேற்கு, கவுதம்நகர், பில்டர்பாடா, மகாத்மாபுலே நகர், பாஸ்போலிகாவ், தானாஜிவாடி பம்பிங் நிலையம், மொரார்ஜி நகர், சர்வோதயா நகர், காவ்தேவி ஹில், டெம்பிபாடா, ரமாபாய் நகர், சாய்ஹில், பாண்டுப் நீர்தேக்கம், குர்லா தெற்கு பகுதியில் உள்ள காஜூபாடா, சுந்தர்பாக், நவ்பாடா, ஹலாவ்புல், நியுமில் ரோடு, கபாடியா நகர், நியுமகாடா காலனி உள்ளிட்ட பகுதிகள்.

தாராவியில் தாராவி மெயின் ரோடு, கணேஷ் மந்திர் ரோடு, திலிப் கதம் ரோடு, ஜாஸ்மின் மில் ரோடு, மாகிம் பாடக், ஏ.கே.ஜி. நகர்.

அந்தேரியில் விஜய்நகர் மரோல், மிலிட்டரி ரோடு, வசந்த் ஒசிஸ், காவ்தேவி, மரோல் விலேஜ், சர்ச் ரோடு, ஹில் வியு சொசைட்டி, கதம்வாடி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

6-ந் தேதி பாண்டுப் குவாரி ரோடு, பிரதாப்நகர் ரோடு, ஜங்கல் மங்கல் ரோடு, தெம்பிவாடா, காவ்தேவி, தத்தா மந்திர் ரோடு, ராம் நகர் பம்பிங் நிலையம், அனுமன்ஹில், அசோக் ஹில், நியு அனுமன் நகர், குர்லா பகுதியில் 90 அடி சாலை, குர்லா-அந்தேரி ரோடு, ஜெரிமெரி, காட்கோபர்- அந்தேரி லிங் ரோடு, சாகிவிகார், மார்வா தொழில்பேட்டை, சத்யாகர் பைப்லைன், தாராவியில் ஜாஸ்மின் மில் ரோடு, மாட்டுங்கா லேபர் கேம்ப், சந்த் ரோகிதாஸ் ரோடு, 60 அடி சாலை, 90 அடி சாலை, சந்த்கக்கயா மார்க், எம்.பி.நகர் தோர்வாடா, எம்.ஜி. ரோடு, தாராவி லூப் ரோடு, ஏ.கே.ஜி.நகர், அந்தேரி பகுதியில் ஓம்நகர், காந்திநகர், ராஜஸ்தான் சொசைட்டி, சாய் நகர், சகார் விலேஜ், பைப்லைன் பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல 5, 6-ந்தேதி ஆகிய 2 நாட்களிலும் அந்தேரி சர்வதேச விமான நிலையம், சீப்ஸ், முல்காவ் டோங்கிரி, எம்.ஐ.டி.சி., கோன்டிவிடா, மகேஷ்வரி நகர், உபாதய்நகர், தாகுர் சால், சால்வே நகர், சக்காலா, இந்திரநகர், ஜே.பி. நகர், கபிர்நகர், பார்சிவாடா, ஏர்போர்ட் ஏரியா, பி.டி. காலனி, பாந்திரா டெர்மினஸ், ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படாது. எனவே பொதுமக்கள் தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி கேட்டு கொண்டு உள்ளது.

Tags:    

Similar News