செய்திகள்

4-வது மாநில கூடைப்பந்து போட்டி: ஆண்கள் பிரிவில் ஐ.ஓ.பி. சாம்பியன்

Published On 2016-09-27 03:12 GMT   |   Update On 2016-09-27 03:12 GMT
14-வது மாநில கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் ஐ.ஓ.பி. அணி இந்தியன் வங்கியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் பனிமலர் ஆதரவுடன் 14-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் நடந்தது. 

இதன் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் ஐ.ஓ.பி. அணி 84-64 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பெண்கள் பிரிவில் மெட்ராஸ் நேஷனல் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

பரிசளிப்பு விழாவில் மலேசிய தூதரக அதிகாரி புஜாரஜம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். விழாவில் இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன், சூர்யா ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் ஸ்ரீகுமார், கிளப் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, எம்.எம்.டி.ஏ.கோபி, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Similar News