செய்திகள்

பந்தை சேதப்படுத்தியதாக அபராதம்: தீர்ப்பை எதிர்த்து பிளிஸ்சிஸ் அப்பீல்

Published On 2016-11-25 08:28 GMT   |   Update On 2016-11-25 08:28 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்தை சேதப்படுத்தியதாக ஐ.சி.சி. விதித்த தீர்ப்பை எதிர்த்து கேப்டன் டு பளிஸ்சிஸ் அப்பீல் செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஹோபர்ட்டில் நடந்த 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிஸ்சிஸ் பந்தை சேதப்படுத்தியதாக போட்டி கட்டணம் முழுவதும் அபராதமாக ஐ.சி.சி. விதித்தது.

ஆனால் தான் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் தீர்ப்பை ஏற்கமாட்டேன் என்று டு பிளிஸ்சிஸ் தெரிவித்தார். அவருக்கு 48 மணி நேரத்தில் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து டு பிளிஸ்சிஸ் ஐ.சி.சி.யிடம் அப்பீல் செய்துள்ளார். அப்பீல் விசாரணையிலும் அவர் குற்றம் செய்தது உறுதியானால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

Similar News