செய்திகள்

இந்திய மண்ணில் பந்துவீசியது புது அனுபவம்: தஸ்கின் அகமது

Published On 2017-02-10 07:44 GMT   |   Update On 2017-02-10 07:44 GMT
இந்திய மண்ணில் பந்து வீசியது பதிய அனுபமாக இந்தது என வங்காள அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி குறித்து வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது கூறியதாவது:-

ஐதராபாத் போன்ற ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்கள் மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டும். பேட்ஸ்மேன்கள் தவறு செய்தால் மட்டுமே விக்கெட்டை கைப்பற்ற முடியும். தவறான பந்துகளை வீசினால் அது பேஸ்ட் மேன்களுக்கு சாதகமாகிவிடும்.

இந்திய மண்ணில் பந்து வீசியது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. நேற்றைய போட்டியில் முதல் ஒரு மணி நேரம் பந்துவீச்சு எடுபட்டது. அதன்பின் பேட்டிங்கிற்கு சாதகமாகி விட்டது என்றார்.

Similar News