செய்திகள்

கொரிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2017-09-15 11:24 GMT   |   Update On 2017-09-15 11:24 GMT
கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் ஜப்பான் வீராங்கனையை 2-1 என வீழ்த்தி பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
கொரிய ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான காலிறுதி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி. சிந்து ஜப்பானைச் சேர்ந்த மினாட்சு மிடானியை எதிர்கொண்டார்.

இந்த தொடருக்கான 5-ம் நிலை வீராங்கனையான பி.வி. சிந்துவிற்கு ஜப்பான் வீராங்கனை கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் செட் கடும் இழுபறியாக சென்றது. இறுதியில் பி.வி. சிந்து 21-19 எனக் கைப்பற்றினார்.



2-வது செட்டில் ஜப்பான் வீராங்கனை மினாட்சு மிடானி சிறப்பாக விளையாடினார். பி.வி. சிந்துவை திணறடித்த மினாட்சு மிடானி 21-16 என அந்த செட்டை கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் பி.வி. சிந்து ஆக்ரோஷமாக விளையாடினார். அந்த செட்டை 21-10 என பி.வி. சிந்து எளிதாக கைப்பற்றி 2-1 என வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
Tags:    

Similar News