null
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற இதை செய்தாலே போதும்..!
- பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி.
- இந்திய அணி விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி.
சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இந்த தொடரில் உலகம் முழுவதிலும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து, பாகிஸ்தான் அணி தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டது. தொடரில் ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. தற்போது இந்திய அணியிடமும் தோல்வியை தழுவி இருக்கிறது.
தொடரின் இரு போட்டிகளில் தோல்வி அடைந்ததை அடுத்து அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், முற்றிலுமாக பறிபோக வில்லை. பாகிஸ்தான் அணி வங்காளதேசம் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்று, நாக் அவுட் சுற்றில் மற்ர அணிகளின் முடிவுகள் அடிப்படையில், அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.
அதன்படி நியூசிலாந்து அணி வங்காளதேசம் மற்று்ம இந்தியா அணிகளுடன் அடுத்து விளையாட உள்ள போட்டிகளில் தோல்வியை தழுவ வேண்டும். பாகிஸ்தான் அணிக்கு தனக்கு எஞ்சியுள்ள கடைசி போட்டியில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு செய்யும் போது மூன்று போட்டிகளின் முடிவில் அவர்களுக்கு 2 புள்ளிகள் கிடைக்கும்.
அப்போது, நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகளும் இதேபோன்ற நிலையில் இருக்கும். இந்த சூழல் உருவாகும் பட்சத்தில் நெட் ரன்-ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகலாம்.
நேற்றைய போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு விராட் கோலி சதம் அடிக்க 42.3 ஓவர்களில் 244 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.
முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புகள் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டன. பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியுமா என்பதை அடுத்தடுத்த போட்டிகளின் முடிவில் தான் தெரியவரும்.