கிரிக்கெட் (Cricket)
null

முதல் ஒருநாள் போட்டி: இலங்கை அணி முதலில் பேட்டிங்- கே.எல். ராகுல் விக்கெட் கீப்பர்

Published On 2024-08-02 08:57 GMT   |   Update On 2024-08-02 11:33 GMT
  • இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.
  • ரிஷப் பண்ட் விளையாடவில்லை. ஷிவம் டுபே விளையாடுகிறார்.

இந்திய அணி தலா மூன்று டி20, ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றியது.

இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. இதில் இலங்கை அணி கேப்டன் அசலங்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யார் களம் இறங்குவார்? என்பதில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் கே.எல். ராகுல் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்திய அணி விவரம்:-

1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மல் கில், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), 6. வாஷிங்டன் சுந்தர், 7. அக்சார் பட்டேல், 8. குல்தீப் யாதவ், 9. அர்ஷ்தீப் சிங், 10. முகமது கிராஜ், 11. ஷிவம் டுபே.

இலங்கை அணி விவரம்:-

1. பதும் நிசாங்கா, 2. அவிஷ்கா பெர்னாண்டோ, 3. குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), 4. சதீரா சமரவிக்ரமா, 5. சரித் அசலங்கா (கேப்டன்), 6. ஜனித் லியானகே, 7. வனிந்து ஹசரங்கா, 8. துனித் வெலாலகே, 9. அகிலா தனஞ்ஜெயா, 10, அசிதா பெர்னாண்டோ, 11. முகமது சிராஸ்.

Tags:    

Similar News