ஐ.பி.எல்.(IPL)
null
ஐபிஎல் 2025: கொல்கத்தாவுக்கு எதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
- கொல்கத்தா அணியில் ஸ்பென்சர் ஜான்சன் அறிமுகமாகிறார்.
- ஆர்சிபி 4 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்களுடன் களம் இறங்குகிறது.
ஐபிஎல் 2025 சீசனின் முதல் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆர்சிபி அணி 4 வேகபந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.
கொல்கத்தா அணி:-
டி காக், வெங்கடேஷ் அய்யர், ரகானே, ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, சுனில் நரைன், அந்த்ரே ரசல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி
ஆர்சிபி அணி:-
விராட் கோலி, சால்ட், ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, ரஷிக் தார் சலாம், சுயாஷ் சர்மா, ஹேசில்வுட், யாஷ் தயால்