
ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகல தொடக்கம்: ஈடன் கார்டனில் கொல்கத்தா- ஆர்சிபி பலப்பரீட்சை
- கொல்கத்தா அணி ரகானே தலைமையில் களம் இறங்குகிறது.
- ரஜத் படிதார் தலைமையில் ஆர்சிபி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.
10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது.
இன்றிரவு நடக்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தற்போது மெகா ஏலத்துக்கு பிறகு ஒவ்வொரு அணிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சமநிலையான ஆடும் லெவன் அணியை தேர்வு செய்ய இரண்டு அணிகளுக்கும் ஒருசில போட்டிகள் தேவைப்படும். கொல்கத்தா அணி கேப்டனாக ரகானேவும் ஆர்சிபி அணி கேப்டனாக ரஜத் படிதாரும் உள்ளனர்.
இந்த போட்டிக்கு வருண பகவான் வழியிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் இன்று கொல்கத்தாவில் பரவலாக மழை பெய்யும். அதுவும் போட்டி நடைபெறும் நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நேற்றிரவு கொல்கத்தா நகரில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் தற்போது வரை மழை பெய்யவில்லை. போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை நிலவரம் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் போட்டி மழை குறுக்கீடு இல்லாமல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இன்றைய போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி மற்றும் பஞ்சாபி பாப் பாடகர் கரண் அவுஜ்லா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
கொல்கத்தா அணி:-
ரகானே, டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரோவ்மேன் பொவேல், மணிஷ் பாண்டே, லவ்னித் சிசோடியா, ரிங்கு சிங் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர், வெங்கடேஷ் அய்யர், அனுகுல் ராய், மொயீன் அலி, ராமன்தீப் சிங், அந்த்ரே ரசல், அன்ரிச் நோர்ஜே, வைபவ் ஆரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, சேத்தன் சக்காரியா
ஆர்சிபி அணி;-
ரஜத் படிதார், விராட் கோலி, பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், ஸ்வாஸ்திக் சிகாரா, லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, மனோஜ் பாண்டேஜ், ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் ஹேசில்வுட், ரஷிக் தார், சுயாஷ் சர்மா, புவனேஸ்வர் குமார், நுவன் துசாரா, லுங்கி நிகிடி, அபிநந்தன் சிங், மோகித் ரதீ, யாஷ் தயால்.