விளையாட்டு (Sports)

பாரீஸ் ஒலிம்பிக்: இரட்டையர் பிரிவில் தனிஷா - அஷ்வினி பொன்னப்பா ஜோடி தோல்வி

Published On 2024-07-28 03:31 GMT   |   Update On 2024-07-28 03:31 GMT
  • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முதல் போட்டியில் வெற்றி.
  • கொரியாவின் கிம் சோ யோங் - காங் ஹீ யோங் ஜோடியுடன் தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா ஜோடி மோதியது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவின் லீக் ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா ஜோடி, கொரியாவின் கிம் சோ யோங் - காங் ஹீ யோங் ஜோடியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கிம் சோ யோங் - காங் ஹீ யோங் இணை 21-18, 21-10 என்ற செட் கணக்கில் தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா ஜோடியை வீழ்த்தியது.

தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா ஜோடி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஜப்பானின் நமி மட்சுயாமா - ஷிஹாரு ஷிடா ஜோடி உடன் மோத உள்ளது.

அதே சமயம் நேற்று நடந்த பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, பிரான்சின் லூகாஸ் கோர்வீ-ரோனன் லபார் ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News