தமிழ்நாடு (Tamil Nadu)

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஒரே நாளில் 100 திருமணங்கள்

Published On 2024-09-15 07:32 GMT   |   Update On 2024-09-15 07:32 GMT
  • திருவந்திபுரம் ஊர் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன.
  • பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடலூர்:

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். மேலும் பிராத்தனை செய்து கொண்டவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து சென்று வருகின்றனர்.

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பு உள்ள மலையில் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணம் நடைபெற்று வருவதால் கூட்ட நெரிசல் அதிகரித்து வந்தது. இதனால் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் நாளையுடன் ஆவணி மாதம் முடிந்து நாளை மறுநாள் புரட்டாசி மாதம் தொடங்குவதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது. இதனை தொடர்ந்து திருவந்திபுரம் ஊர் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. மேலும் திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றனர்.

கோவில் திருமண மண்டபத்தில் 75 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 25 திருமணங்கள் என 100 திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Tags:    

Similar News