செய்திகள்

மதுரையில் நள்ளிரவில் ரவுடி வெட்டிக்கொலை

Published On 2016-09-27 05:29 GMT   |   Update On 2016-09-27 05:29 GMT
மதுரையில் நள்ளிரவில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை தெற்குவாசல் தென்னோலைக்காரத் தெருவை சேர்ந்தவர் மகாமுனி (வயது47). இவர் சிற்பங்கள் செய்யும் பணி செய்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியில் இவர் சிலருடன் சேர்ந்து கொண்டு அப்பகுதிகளில் உள்ளவர்களை மிரட்டி தாதாபோல் சுற்றி வந்தது தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மகாமுனி மீது தெற்குவாசல் போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு 11.30 மணி அளவில் தெற்குவாசல் பகுதியில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் தெருவில் மகாமுனி சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் மகா முனியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News