செய்திகள்

2 ஆண்டுகளுக்கு முன் மாயமான போலீஸ் டி.எஸ்.பி. பிடிப்பட்டார்

Published On 2017-03-03 07:43 GMT   |   Update On 2017-03-03 09:11 GMT
மத்திய பிரதேச மாநிலத்தின் கார்கோனெ பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவான போலீஸ் டி.எஸ்.பி. பிடிப்பட்டார். லாட்ஜில் வைத்து போபால் போலீசார் அவரை கைது செய்தனர்.
கார்கோனெ:

மத்திய பிரதேச மாநிலம், போபால் நகரில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் மன்சிங் தேகாம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் திடீரென மாயமானார். பல நாட்கள் வரை இவரை பற்றிய எந்த தரகவலும் கிடைக்காததால் மன்சிங்கின் உறவினர்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்திருந்தனர். 



மிகப்பெரிய பொறுப்பில் இருந்த போலீஸ் உயர் அதிகாரி காணாமல் போனாது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் இந்நிலையில் காணாமல் போன மன்சிங் பார்வா பகுதியின் லாட்ஜ் ஒன்றில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகிய தகவல் வந்தது. இதையடுத்து அங்கு விரைவந்த போலீசார் மன்சிங்கை கைது செய்தனர்.

இந்தூர் நகரில் உள்ள மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News