செய்திகள்

திருமங்கலம் அருகே புதுமண தம்பதி விபத்தில் பலி

Published On 2017-04-24 09:35 GMT   |   Update On 2017-04-24 09:37 GMT
திருமங்கலம் அருகே புதுமண தம்பதி விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூர், ஏப். 24-

திருமங்கலம் அருகே மினிலாரி மோதிய விபத்தில் புதுமண தம்பதியினர் பரிதாபமாக இறந்தனர்.

மதுரை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவருக்கும், ஜோதி (24) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இருவரும் காரியாபட்டி அருகே ஆவியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டனர். அதன்படி 2 பேரும் மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். ஆவியூருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

திருமங்கலம் அருகே பாறைபத்தி டோல் கேட் அருகே வந்து கொண் டிருந்தபோது சக்திவேல் 4 வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது தூத்துக்குடிக்கு சென்ற மினி லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த கணவனும், மனைவியும் சம்பவ இடத்திலேயே பரிதா பமாக இறந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்தி ற்கு வந்து 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தூத்துக் குடி மாவட்டம் விளாத்திக் குளத்தைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் பிரபு என்ப வரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 4 மாதத் தில் விபத்தில் சிக்கி புதுமண தம்பதி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News