தமிழ்நாடு

சென்னை- புறநகர் பகுதிகளில் 2,800 விநாயகர் சிலைகள் இன்று பூஜைக்காக வைக்கப்பட்டன

Published On 2024-09-07 07:48 GMT   |   Update On 2024-09-07 07:48 GMT
  • சிலைகள் வருகிற 11, 14, 15 ஆகிய 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.
  • அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1,519 விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டு உள்ளன. ஆவடி கமிஷனர் அலுவலக பகுதிகளில் 683 சிலைகளும், தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் 600 சிலைகளும் நிறுவப்பட்டு உள்ளன.

இதன் மூலம் சென்னை புறநகர் பகுதிகளில் 2,800 சிலைகள் நிறுவப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ள நிலையில் அனுமதியின்றி சிலைகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் சிலை ஏற்பாட்டாளர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். போலீசாரும் ரோந்து சுற்றி கண்காணிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இன்று வைக்கப்பட்டுள்ள சிலைகள் வருகிற 11, 14, 15 ஆகிய 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.

அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை, நீலாங்கரை பல்கலைநகர் உள்ளிட்ட இடங்களில் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சென்னை மாநகர பகுதியில் 16,500 போலீசார் 2 ஆயிரம் ஆயுதப்படை காவலர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள நிலையில் தாம்பரம், ஆவடி பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News