தமிழ்நாடு (Tamil Nadu)

வயல் வெளியில் கவிழ்ந்து கிடந்த பஸ்.

வந்தவாசி அருகே வயலுக்குள் பஸ் பாய்ந்து 30 பேர் படுகாயம்

Published On 2022-12-04 06:30 GMT   |   Update On 2022-12-04 06:30 GMT
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரத்தில் விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
  • பஸ்சில் பயணம் செய்த தேசூர், மேல்ஒலக்கூர், செஞ்சி, காஞ்சிபுரம் ஊரை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

வந்தவாசி:

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி தேசூர் வழியாக செஞ்சிக்கு தனியார் பஸ் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது வந்தவாசி அடுத்த திரக்கோவில் கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரத்தில் விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்சில் பயணம் செய்த தேசூர், மேல்ஒலக்கூர், செஞ்சி, காஞ்சிபுரம் ஊரை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

தேசூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News