தமிழ்நாடு

அனைத்து ரேஷன் கடைகளும் 31-ந்தேதி திறந்திருக்கும்: தமிழக அரசு

Published On 2024-08-29 02:06 GMT   |   Update On 2024-08-29 02:06 GMT
  • அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் இன்றியமையாப் பண்டங்கள் வினியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை.
  • இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஆகஸ்டு மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம்.

சென்னை:

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் த.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் இன்றியமையாப் பண்டங்கள் வினியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை.

ஆனால் இந்த மாதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இன்றியமையாப் பண்டங்கள் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற 31-ந் தேதி (சனிக்கிழமை) அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்றியமையாப் பண்டங்கள் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஆகஸ்டு மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News