தமிழ்நாடு (Tamil Nadu)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- 50 பேரிடம் ரகசிய விசாரணை

Published On 2024-07-26 09:30 GMT   |   Update On 2024-07-26 09:39 GMT
  • போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
  • ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 2 பேர் பிடிபட்டுள்ளனர்.

சென்னை:

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை 17 பேரை கைது செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 2 பேர் பிடிபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரை வேவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான திருமலையின் உறவினரான பிரதீப் மற்றும் முகிலன் ஆகிய 2 பேர் பிடிபட்டுள்ளனர்.

இதுவரை கைதான நபர்களின் செல்போன் எண்களை வைத்து துப்பு துலக்கி வரும் போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தான் பிரதீப்பும், முகிலனும் தற்போது பிடிபட்டுள்ளனர். இவர்களை தவிர மேலும் 50 பேரும் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்த லிங்கை கிளிக் செய்யவும்- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- மேலும் ஒரு வழக்கறிஞர் கைது

Tags:    

Similar News