சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
- பல்கலைக்கழக வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
- மிரட்டல் விடுத்த வாலிபரை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சற்றுநேரத்தில் வெடிக்கும் என்றும் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலமாக மிரட்டல் விடுத்திருந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோட்டூர்புரம் போலீசார் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது தெரியவில்லை. அவரை கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் இ-மெயில் எந்த முகவரியில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது? என்பது பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த வாலிபரை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.