தமிழ்நாடு (Tamil Nadu)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை மூட்டைகள் பறிமுதல்

Published On 2024-08-26 05:27 GMT   |   Update On 2024-08-26 05:27 GMT
  • வாகன சோதனையில் பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
  • போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை வழியாக பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதியில் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திரேஸ்புரம் கடற்கரையின் வடக்கு பகுதியில் படகு பழுது சரி பார்க்கும் இடத்தில் நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற லோடு ஆட்டோவை சோதனை செய்தனர்.

அப்போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 9 பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவற்றையும், அங்கிருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரத்தை சேர்ந்த ஆரோக்கிய ஜான்சன் (வயது 36) என்பரை கைது செய்தனர்.

மேலும் ஆரோக்கிய ஜான்சனுக்கு சொந்தமான பைபர் படகில் கடத்தலில் ஈடுபட்ட மற்றவர்கள், மீதி இருந்த பீடி இலை மூட்டைகளுடன் கடலுக்குள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News