சந்திராயன் 3 வெற்றி: எல்லை கருப்பன் கோவிலில் 1008 தீப விளக்கில் ஒளிர்ந்த இஸ்ரோ லோகா
- சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
- ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் தேன்கூடு அமைப்பினர் செய்திருந்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே ஒன்னிபாளையம் எல்லை கருப்பராயன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
அப்போது சந்திராயன்-3 விண்கலம் நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 108 மீட்டர் நீளம் கொண்ட இந்திய தேசியக்கொடியும், இஸ்ரோவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பலவண்ண கோலமும் உருவாக்கப்பட்டு, 1,008 மண்விளக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது. மேலும் 108 ஆன்மீகப் பெரியவர்களும், 108 தூய்மைப் பணியாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிலவிற்கு தீபாராதனை காட்டி சிறப்பு வழிப்பாடு செய்தனர். இதில் கோவை, திருப்பூர் , சென்னை, ஈரோடு மற்றும் உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் தேன்கூடு அமைப்பினர் செய்திருந்தனர்.