தமிழ்நாடு

கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை மறுநாள் தொடக்கம்

Published On 2024-07-01 03:49 GMT   |   Update On 2024-07-01 03:49 GMT
  • அனைத்து கல்லூரிகளுக்குமான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.
  • கால அட்டவணையை அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும்.

சென்னை:

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் மே 6-ந்தேதி வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை பணிகள் தொடங்கப்பட்டன. சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 24-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு மே 30 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநா் காா்மேகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: -

தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை மறுநாள் (3-ந்தேதி) தொடங்குகிறது.

முதலாம் ஆண்டுக்கான முதல் பருவத் தோ்வுகள் (செமஸ்டா்) அக். 31-ல் தொடங்கி, நவ. 25-ந்தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். டிச. 16-ந் தேதி அனைத்து கல்லூரிகளுக்குமான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இந்த கால அட்டவணையை அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News