தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னை காவல் ஆணையர் பெயரில் மோசடி முயற்சி

Published On 2024-09-22 12:49 GMT   |   Update On 2024-09-22 12:49 GMT
  • சென்னை காவல் ஆணையர் சமூக வலைதள பக்கத்தை இணைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
  • புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பு.

சென்னை காவல் ஆணையர் அருண் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் டிபி-ல் சென்னை காவல் ஆணையர் அருண் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவதாக புகைப்படம் ஆதாரத்துடன் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, சென்னை காவல்துறை, சென்னை காவல் ஆணையர் சமூக வலைதள பக்கத்தை இணைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News