தமிழ்நாடு (Tamil Nadu)

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்- சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

Published On 2024-07-29 10:15 GMT   |   Update On 2024-07-29 10:16 GMT
  • தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • தடுப்பூசிக்கு எவ்வித கட்டணமும் பொதுமக்களிடம் வசூலிக்கக் கூடாது.

சென்னை:

தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் எந்தவித கட்டணமின்றி குழந்தைகள், பெரியவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது.

இதே போல தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

அரசு மருத்துவமனைகளில் அனைத்து தடுப்பூசிகளும் இலவசமாக போடப்படுவது போல தனியார் மருத்துவ மனைகளிலும் போடுவதற்கான திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அந்த மருத்துவமனைகள் பொது மக்களுக்கு இலவசமாக போடுகிறோம் என்று உறுதி அளித்தால் தடுப்பூசியை சுகாதாரத்துறை வழங்கும். தடுப்பூசிக்கு எவ்வித கட்டணமும் பொதுமக்களிடம் வசூலிக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News