தமிழ்நாடு

கோத்தகிரியில் பூண்டு கொள்முதல் விலை உயர்வு

Published On 2024-08-31 05:09 GMT   |   Update On 2024-08-31 05:09 GMT
  • சைனா ரக பூண்டு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்யபடுகிறது.
  • விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது.

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் விளைநிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன், நெடுகுளா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முதல் போகமாக கடந்த ஜனவரி மாதமும், 2-ம் போகமாக ஏப்ரல் மாதத்திலும் பூண்டு பயிரிட்டனர்.

கடந்த சில வாரங்களாக போதுமான மழை பெய்தது. இதனால் பூண்டு பயிர்கள் செழித்து வளர்ந்து உள்ளது.

இந்தநிலையில் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் நீலகிரி பூண்டு உச்சபட்சமாக ரூ.400-க்கு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 400 முதல் 300 ரூபாய் கொள்முதல் செய்யப்பட்டது.

சைனா ரக பூண்டு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்யபடுகிறது. இமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு விதை வாங்க ஏராளமான வியாபாரிகள் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு வருவதால் நீலகிரி பூண்டின் கொள்முதல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News