தமிழ்நாடு

துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

Published On 2024-07-29 06:30 GMT   |   Update On 2024-07-29 06:39 GMT
  • சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றிருப்பது சிறப்புக்குரியது.
  • வீராங்கனையின் வெற்றிக்கு துணை நின்ற பெற்றோரையும், பயிற்சியாளரையும் பாராட்டுகிறேன்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதலுக்கான இறுதிப்போட்டியில் மனு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெண்கலப் பதக்கம் பெற்றிருக்கும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனு பாக்கர் தாய் நாட்டிற்கு உலக அளவில் பெருமை சேர்த்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றிருப்பது சிறப்புக்குரியது.

வீராங்கனையின் வெற்றிக்கு துணை நின்ற பெற்றோரையும், பயிற்சியாளரையும் பாராட்டுகிறேன்.

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்திய நாட்டிற்கு முதல் பதக்கம் வென்று கொடுத்திருக்கும் மனு பாகெர் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைப் படைத்துமென் மேலும் வளர, வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News