தமிழ்நாடு (Tamil Nadu)

தங்கம் விலை பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது

Published On 2023-01-09 06:41 GMT   |   Update On 2023-01-09 09:41 GMT
  • பாதுகாப்பான முதலீடு என்பதால் தங்கத்தின் மீது அதிகமானோர் முதலீடு செய்து வருகின்றனர்.
  • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது.

சென்னை:

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த மாதம் பவுன் ரூ.39 ஆயிரமாக இருந்த தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. இன்று இது ரூ.42 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை அளித்து உள்ளது.

நேற்று கிராம் ரூ.5,221-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.5,260 ஆக உயர்ந்தது. பவுன் ரூ.41,768-ல் இருந்து ரூ.42,080 ஆக அதிகரித்து இருக்கிறது.

இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை கிராம் ரூ.39-ம் பவுன் ரூ.312-ம் உயர்ந்து உள்ளது. பாதுகாப்பான முதலீடு என்பதால் தங்கத்தின் மீது அதிகமானோர் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு உள்ளதாக கூறப்படுகிறது

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை அளித்துள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. கிராம் ரூ.74.40-ல் இருந்து ரூ.74. 90 ஆகவும், கிலோ ரூ.74,400-ல் இருந்து ரூ.74,900 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.

Tags:    

Similar News