- கடந்த சில மாதமாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை சமீபத்தில் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை தொட்டது.
- வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1000 உயர்ந்தது
சென்னை:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த சில மாதமாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை சமீபத்தில் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை தொட்டது. ஒரு கிராம் ரூ.5000-க்கு விற்றது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருமண ஏற்பாடுகளை செய்து வந்த குடும்பத்தினர் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதை கண்டு என்ன செய்வது என்று திகைத்தனர்.
இந்த நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்தை நெருங்கியது. நேற்று ஒரு கிராம் ரூ.5040 ஆக இருந்த தங்கம் இன்று 60 ரூபாய் அதிகரித்து ரூ.5,100 ஆக அதிகரித்தது. பவுன் ரூ.480 அதிகரித்து ரூ.40,800 ஆக உயர்ந்தது.
வெள்ளி விலையும் கிலோவிற்கு ரூ.1000 உயர்ந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.73 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.74 ஆக அதிகரித்துள்ளது.