தமிழ்நாடு (Tamil Nadu)

தங்கம் விலை பவுனுக்கு ரூ.368 உயர்வு

Published On 2023-01-14 05:17 GMT   |   Update On 2023-01-14 06:07 GMT
  • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.368 அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 368-க்கு விற்றது.
  • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது.

சென்னை:

தங்கம் விலையில் சில நாட்களாக தொடர்ந்து உயர்வு காணப்பட்டது. பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டது.

இதற்கிடையே நேற்று பவுனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.42 ஆயிரத்தை தொட்டது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.368 அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 368-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.46 உயர்ந்து ரூ.5 ஆயிரத்து 296 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.75 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 75-க்கு விற்கிறது.

கடந்த 9-ந்தேதி பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டிய நிலையில் அதன்பின் விலை குறைந்து ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் விற்றது. நேற்று மீண்டும் ரூ.42 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலையில் இன்று ரூ.368 உயர்ந்திருப்பது நடுத்தர, ஏழை மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

Tags:    

Similar News