தமிழ்நாடு (Tamil Nadu)

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு- பவுன் ரூ.41.528-க்கு விற்பனை

Published On 2023-01-03 06:22 GMT   |   Update On 2023-01-03 06:22 GMT
  • பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு உள்ளதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  • வெள்ளி விலை அதிகரித்து இருக்கிறது.

சென்னை:

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதனால் பவுன் ரூ.41 ஆயிரத்தை கடந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நேற்று கிராம் ரூ.5,150-க்கு விற்பனை ஆனது. இன்று இது 5,191 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று பவுன் ரூ.41,200-க்கு விற்பனை ஆன தங்கம் இன்று ரூ.41,528 ஆக அதிகரித்து உள்ளது.

தங்கம் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.41-ம், பவுனுக்கு ரூ.328-ம் உயர்ந்து இருக்கிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு உள்ளதால் நகை வாங்க இருந்தவர்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதே போல வெள்ளி விலையும் அதிகரித்து இருக்கிறது. கிராம் ரூ. 74.50-ல் இருந்து ரூ.75.50 ஆகவும் கிலோ 74,500-ல் இருந்து ரூ.75,500 ஆகவும் உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News