தமிழ்நாடு (Tamil Nadu)

குரூப் 4 காலி பணியிடங்களை 15 ஆயிரம் வரை அதிகரிக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Published On 2024-10-13 05:21 GMT   |   Update On 2024-10-13 05:21 GMT
  • அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும்.
  • அரசுத் துறைகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2024-ம் ஆண்டு குரூப்-4 போட்டித் தேர்வினை எழுதி விட்டு முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கும் எதிர்கால இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை ஓரளவுக்கு நிறைவேற்றும் வண்ணமும், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளதைக் கருத்தில் கொண்டும், தொகுதி-4-ன்கீழ் வரும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரம் வரை அதிகரிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து, அரசுத் துறைகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News