தமிழ்நாடு (Tamil Nadu)

ஜெயக்குமார் வழக்கு: முன்னாள் பஞ்சாயத்து தலைவரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை

Published On 2024-06-14 07:30 GMT   |   Update On 2024-06-14 07:30 GMT
  • முன்னாள் ஆலய தர்மகர்த்தாவும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஆனந்தராஜா ஆஜரானார்.
  • சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக விசரணை நடைபெற்று வருகிறது.

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக விசரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையில் ஆஜராவதற்காக தெற்கு கள்ளிகுளம் முன்னாள் ஆலய தர்மகர்த்தாவும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஆனந்தராஜா ஆஜரானார்.

அவரிடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயக்குமார், மரண வாக்குமூலம் என்ற பெயரில் எழுதி இருந்த முதல் கடிதத்தில் தனது உயிருக்கு ஆபத்து இவர்களால் நேரலாம் என்று பலரது பெயரை குறிப்பிட்டு இருந்தார்.

அதில் முதல் நபராக ஆனந்த ராஜாவின் பெயரை குறிப்பிட்டு இருந்ததார். இந்நிலையில் இன்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News