தமிழ்நாடு (Tamil Nadu)

ராமதாஸ், அன்புமணிக்கு சவால் விடும் தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள்

Published On 2024-06-22 06:10 GMT   |   Update On 2024-06-22 06:10 GMT
  • கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
  • சாராய வியாபாரி கண்ணுக்குட்டி தி.மு.க. பிரமுகர் இல்லை.

சென்னை:

கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புள்ளதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், சட்டசபை வளாகத்திற்கு வெளியே தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

* உண்மைக்கு மாறானவற்றை கூறும் ராமதாஸ், அன்புமணி ராமதாசுக்கு கண்டனம்.

* கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

* கள்ளச்சாராயம் குடித்து பலியோனோரின் குடும்பத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

* இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாமல் அங்கு சென்றும் மலிவான அரசியல் செய்கிறார் அன்புமணி.

* எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்து விலக தயார். அதேபோல் அவர்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவார்களா?

* சாராய வியாபாரி கண்ணுக்குட்டி தி.மு.க. பிரமுகர் இல்லை. வீட்டில் தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் கண்ணுக்குட்டி தி.மு.க பிரமுகராகிவிடுவாரா?

* ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News