தமிழ்நாடு (Tamil Nadu)

விருகம்பாக்கம் 128-வது வார்டு கவுன்சிலர் ரத்னா லோகேஸ்வரனுக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு

Published On 2022-11-04 10:08 GMT   |   Update On 2022-11-04 10:08 GMT
  • 128-வது வார்டு சாரதா நகர் பகுதியில் மழை நீர் அதிகம் தேங்கி இருப்பதாக கவுன்சிலர் ரத்னா லோகேஸ்வரனை பொதுமக்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.
  • ஏ.வி.எம். காலனி பகுதியில் தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் கவுன்சிலர் ரத்னா தொடர்ந்து ஈடுபட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்று வருகிறார்.

சென்னை:

சென்னை விருகம்பாக்கத்தில் 128-வது வார்டில் பருவ மழையால் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளார் கவுன்சிலர் ரத்னா லோகேஸ்வரன்.

128-வது வார்டு சாரதா நகர் பகுதியில் மழை நீர் அதிகம் தேங்கி இருப்பதாக கவுன்சிலர் ரத்னா லோகேஸ்வரனை பொதுமக்கள் தொடர்பு கொண்டுள்ளனர். உடனே அவர் இரவு பகல் பாராமல் ஜே.சி.பி. எந்திரம் மூலமாகவும் மோட்டார் பம்பு மூலமாகவும் வடிகால் நீரை அகற்றி பணியாற்றி உள்ளார்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகராஜா அங்கு சென்று பார்வையிட்டு உள்ளார். தொடர்ந்து இளங்கோ நகர், சாய்பாபா காலனி, வெங்கடேஸ்வரா நகர், தாரா சந்த் நகர், சஞ்சய் காந்தி நகர், கிருஷ்ணா நகர், காமராஜர் சாலை, பங்காரு காலனி, மாரியம்மன் கோவில் தெரு, ஏ.வி.எம். காலனி பகுதியில் தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் கவுன்சிலர் ரத்னா தொடர்ந்து ஈடுபட்டு மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். அவருடன் வட்ட செயலாளர்கள் கோவிந்தராஜ், ராஜா உடன் சென்றிருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள ஒருவர் சமூக வலைத்தளத்தில் இப்படி ஒரு பெண் கவுன்சிலரை தான் பார்த்ததே இல்லை என்று பதிவு செய்துள்ளார். அதற்கு ரத்னா லோகேஸ்வரனும் மறுபதிவு செய்து நன்றி தெரிவித்தார்.

சமூக வலைத்தளத்தில் இந்த பதிவை பார்த்த எம்பி கனிமொழியும் ரத்னா லோகேஸ்வரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு செய்துள்ளார்.

Tags:    

Similar News