தமிழ்நாடு

கிருஷ்ண ஜெயந்தி- கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

Published On 2024-08-26 04:28 GMT   |   Update On 2024-08-26 04:48 GMT
  • ஸ்ரீமத் பகவத் கீதை காலத்தால் அழியாத ஞானத்தையும் தழுவுவதற்கு நம்மைத் தூண்டுகிறது.
  • அனைத்து மனிதகுலத்தின் நலன் மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றவும் நமக்குள் உறுதி கொள்வோம்.

சென்னை:

இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

இந்த மகிழ்ச்சியான திருவிழா, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக மகத்துவத்தையும், ஸ்ரீமத் பகவத் கீதையின் காலத்தால் அழியாத ஞானத்தையும் தழுவுவதற்கு நம்மைத் தூண்டுகிறது. கர்ம கோட்பாட்டின்படி நடக்கவும் தேச வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படவும் அனைத்து மனிதகுலத்தின் நலன் மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றவும் நமக்குள் உறுதி கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News