தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னை வெள்ளத்தை திசை திருப்பவே தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை பெரிதாக்கப்படுகிறது- எல்.முருகன்

Published On 2024-10-19 06:39 GMT   |   Update On 2024-10-19 06:39 GMT
  • யாதும் ஊரே யாவரும் கேளிர் என வெளிநாடுகளில் தமிழுக்கு பெருமை சேர்ப்பவர் பிரதமர் மோடி.
  • குழந்தைகள் தவறிழைத்ததற்கு கவர்னரை தொடர்புபடுத்தி பேசுவது தவறு.

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சென்னை வெள்ளத்தை திசை திருப்பவே தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையை பெரிதாக்குகின்றனர்.

* டிடி தமிழ் அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை என்பது முற்றிலும் மக்களை திசை திருப்பும் செயல்.

* யாதும் ஊரே யாவரும் கேளிர் என வெளிநாடுகளில் தமிழுக்கு பெருமை சேர்ப்பவர் பிரதமர் மோடி.

* நிகழ்ச்சியில் நடந்த தவறுக்கு சிறப்பு விருந்தினரான கவர்னர் ஆர்.என்.ரவி எப்படி பொறுப்பாவார்.

* திமுக-வினர் கவர்னர் மீது குற்றம் சாட்டுவது உள்நோக்கம் கொண்டது.

* நடந்த தவறுக்கு டிடி சார்பில் மன்னிப்பு கேட்டுவிட்டனர்.

* குழந்தைகள் தவறிழைத்ததற்கு கவர்னரை தொடர்புபடுத்தி பேசுவது தவறு.

* இந்தி மாதம் என்பது காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் போதும் நடைபெற்றது என்று கூறினார்.

Tags:    

Similar News