தமிழ்நாடு
நீட் தேர்வுக்கு எதிரான முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள்: மு.க.ஸ்டாலின்
- தி.மு.க. மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- நீட் எனும் சமூக அநீதிக்கு எதிரான தி.மு.க.வின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள்.
சென்னை:
'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தி.மு.க. மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய 'எக்ஸ்' தளப் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
நீட் எனும் சமூக அநீதிக்கு எதிரான தி.மு.க.வின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள்.
இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.