தமிழ்நாடு (Tamil Nadu)

காவேரிப்பாக்கம் அருகே பைக் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

Published On 2023-05-01 07:03 GMT   |   Update On 2023-05-01 07:03 GMT
  • காவேரிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த மணல் லாரி பைக் மீது மோதியது.
  • தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த 3 பேரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 18). அந்த பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அதே ஊரை சேர்ந்தவர் சச்சின் (17)காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (16). இவர்கள் 3 பேரும் இன்று ஒரே மோட்டார் சைக்கிளில் நெல் நாற்று வாங்குவதற்காக வந்தனர்.

காவேரிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த மணல் லாரி பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அருண்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதுபற்றி தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த 3 பேரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியில் சச்சின் இறந்தார். ஜீவானந்தத்திற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News